எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

புதன், நவம்பர் 18, 2009

நுரையீரல்

நுரையீரல்

நுரையீரல் என்பது உயிரனங்கள் தங்களின் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். அது மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதுடன், வேறுசில வேதிப்பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் பணியாகும்.  நுரையீரலானது உடல் இயக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிசனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதற்கு உரிய முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம் கிட்டதட்ட 255 கன மீட்டர் [9000.கன அடி] காற்றை உள்ளிழுத்து வெளியிடுகின்றோம்.  நம்மில் பலருக்கு மார்பு சளி, ஒவ்வாமையினால் (அலர்ஜி) மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் வருவதுண்டு. இதற்கு காரணம் நம்முடைய உணவு பழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல். நாம் வாழும் நகரத்தில் தொழில் சாலைகள் 49%, வாகனம் மற்றும் நாம் உபயோகிக்கும் குளிர் சாதனங்கள் மூலம் 12% இப்படி நச்சுக் கழிவுகள் நாளுக்கு நாள் கலந்து கூடி கொண்டே போகின்றது மரங்கள் அதிகம் இருந்தாலும் கார்பன் டை ஆக்ஸ்சைடை உள்ளிழுத்து நமக்குத் தேவையான ஆக்ஸிசனை தரும் நாம் வாழும் நகரத்தில் அதற்கும் வழி இல்லை, இந்த நிலையில் நம்முடையு உணவு மற்றும் உடல் பயிற்சி மூலமே நிவாரணம் தேடமுடியும். சாப்பாடு, தண்ணீர் உட்கொள்ளும் போது மிதமான சூட்டுடன் இருக்கவேண்டும் சிலர் கொதி தண்ணிரில் ஜீரகம் கலந்து அருந்துகிறார்கள் இதில் சளித் தொல்லை உள்ளவர்கள் ஜீரகத் தண்ணிர் அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். கொத்து மல்லி, இஞ்ஜி, கலந்த தண்ணீரைக் குடிக்கலாம்.

கொதிக்கவைத்த தண்ணீரை நன்கு ஆறியவுடன் குடிக்கின்றார்கள் அப்படிச் செய்யாமல் மிதமான சூட்டுடன் குடிப்பது நன்மைதரும். நுரையீரலில் மார்புப் பகுதியில் சளி படிந்து கொண்டுதான் இருக்கும் அது ஒருவித சளிகொழுப்பு. அதன் மீது இளஞ் சூட்டுடன் தண்ணீர் உணவு படப்பட சளி கொழுப்புகள் இழகிவிடும். குறிப்பாக சிலருக்கு மூச்சி விட்டால் கர் புர் என்று பூனை கத்துவது போல் சப்தம் வரும் இதற்காக மருந்துகள்  சாப்பிட்டாலும் மருந்துகள் முடிந்ததும் மீண்டும் அதேத் தொல்லை தொடரும். முடிந்தவரை இதிலிருந்து தப்பித்துகொள்ள வேண்டும் என்றால் மிதமா சூட்டில் தண்ணீர், உணவு மற்றும் சின்னச்சின்ன உடற்பயிற்சிகள் மூலமே சளித் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். அல்லாஹ் போதுமானவன்.

 ரியாத்திலிருந்து அரசூர் ஃபாரூக்  

 

புதன், நவம்பர் 11, 2009

வந்தே மாதரம் பாடல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது!

வந்தே மாதரம் பாடல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது!

 

உத்திரப் பிரதேச மாநிலம்  தேவ்பந்த் நகரில் ஜம்மியதே உலமாயே ஹிந்த் அமைப்பின் சார்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதும் ஒன்றாகும்.


இம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று சங்பரிவார கும்பல் கூச்சலிட்டு வருகின்றனர்.

சங்பரிவாரம் என்னதான் கூக்குரல் போட்டாலும் முஸ்லிம்கள் ஒருபோதும் வந்தே மாதரம் பாடலை பாடவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறோம்.

 

வரலாற்று ரீதியாக இப்பாடலின் தோற்றம் முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்பாடலின் கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது என்பதால்தான் இப்பாடலை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.

வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற பெயரில் ஒரு நாவல் எழுதப்பட்டது. இந்து முஸ்லிம் மோதலை மையமாகக் கொண்ட இந்நாவல், வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுவோர் இந்துக்கள் என்றும், பாட மறுப்போர் முஸ்லிம்கள் என்றும் இனம் காணப்பட்டு அதனடிப்படையில் முஸ்லிம்கள் அழித் தொழிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்துக்களின் கொள்கைப் பிரகடனமாக இப்பாடல் அமைந்துள்ளதால்தான் இந்துத்துவா சக்திகள் இப்பாடலைப் பாடுவதை தேசபக்தியின் அடையாளமாகச் சித்தரிக்கின்றனர். ஒரு காலத்தில் காங்கிரஸ் மாநாடுகளிலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இப்பாடல் பாடப்பட்டு பின்னர் முஸ்லிம்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

1950ல் "ஜனகனமன…" என்பது தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டு வந்தே மாதரம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் சங்பரிவாரத்தினரும், சினிமாக் கூத்தாடிகளும் வந்தே மாதரம் என்பதுதான் தேசபக்தியின் அடையாளம் என்பது போல் தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர்.


வந்தே மாதரம் என்பதன் பொருள் என்ன? "வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்று பாரதியார் பாடி நாடு எனும் தாயை வணங்குகிறோம் என்பதுதான் இதன் பொருள் என்று சொல்லித் தருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் என்பவரும் வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே வணக்கம் என்று இசை அமைத்து, இதன் அர்த்தத்தை அனைவரையும் அறியச் செய்துள்ளார்.


அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை ஏற்றுள்ள முஸ்லிம்கள் ஒருக்காலும் மண்ணை வணங்க மாட்டார்கள்.


இப்பாடன் விளக்கம் இப்படி என்றால் பாடல் முழுவதும் இந்தியாவை துர்க்கையாகவும், சரஸ்வதியாகவும், இந்துக்களின் இன்னபிற பெண் கடவுள்களாகவும் சித்தரிக்கிறது. அதாவது சரஸ்வதி, துர்க்கை ஆகியோரை நாங்கள் வணங்குகிறோம் என்பது ஒட்டு மொத்த பாடலின் கருத்தாகும்.

ஒரு முஸ்லிம் எப்படி இவற்றை வணங்க முடியும். அவ்வாறு கூறுவது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத உரிமைக்கு எதிரானது என்பதால் இது தடை செய்யப்பட வேண்டிய ஒரு பாடலாகும்.


இப்பாடலை பாட மறுப்பது மார்க்க அடிப்படையில் முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும். எனவே தேவ் பந்த் உலமாக்கள் இயற்றிய இத்தீர்மானத்தை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் வழி மொழிகிறது என்பதை அறிவிக்கிறோம். இந்த நேரத்தல் இந்தியாவின் உள்துறை அமைச்சரின் கையாலாகாத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.


ப. சிதம்பரம் கலந்து கொண்ட மாநாட்டில் இத்தீர்மானம் இயற்றப்பட்டது உண்மை. இதை சங்பரிவாரம் எதிர்த்தால்  ப.சிதம்பரம் என்ன பதில் சொல்யிருக்க வேண்டும்? இப்பாடல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது; முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு எதிரானது. இதை பாட வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் இல்லை என்று தான் அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால் ப. சிதம்பரம் சொல்யிருக்கும் பதில் வெட்கக் கேடானது. உள்துறை அமைச்சர் பதவி வகிக்க அவர் தகுதியற்றவர் என்பதைப் பறை சாற்றும் வகையில் அவரது பதில் அமைந்துள்ளது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக்குத் தெரியாது என்பது அவரது பதில். இதன் அர்த்தம் தெரிந்திருந்தால் கலந்திருக்க மாட்டேன்; இத்தீர்மானம் தவறானது என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. ப.சிதம்பரமும் சங்பரிவாரத்தின் குரலையே எதிரொலிக்கிறார்.  இதுபோன்ற கோழைகளை அழைத்து மாநாடு நடத்துவோர் இனியாவது சொந்தக் கால் நிற்க பழக வேண்டும்.


நமக்கு ஒரு பிரச்சினை என்றால் எவனாக இருந்தாலும் நம்மைக் கைவிட்டு விடுவதை ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக ப. சிதம்பரம் முஸ்லிம் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ப. சிதம்பரம் என்ன? அகில உலகமே திரண்டு வந்து வந்தே மாதரத்தை நியாயப்படுத்த முன்வந்தாலும் இஸ்லாத்துக்கு எதிரான அப்பாடலை முஸ்லிம்கள் பாட மாட்டார்கள் என்பதை மீண்டும் திட்டவட்டமாக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் அறிவிக்கிறோம்.


உங்கள் நாவுகளால் அவதூறு பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவில்லாதவை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை லேசானதாகவும், எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.

(அல்குர்ஆன் 24:15)

-பி.ஜே

 நன்றி : www.tntj.net

சனி, நவம்பர் 07, 2009

ஐஐடி யில் முஸ்லீம்கள் – மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது.

கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.

இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது.


படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் 

எண்ணிக்கை மிக மிக குறைவு.


இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2010 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் கீழே இடம் பெற்றுள்ளது).

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

ஐஐடி-யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம் : ஐஐடி-யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி-யில் சேருவது மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி-யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது, சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர். இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை .

மாணவ மாணவியர்களே!

இதை மாற்ற நாமும் ஐஐடி-யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது மாணவரணி, உங்களுக்கு வழிகாட்ட ஐஐடி-யில் படித்த சகோதரர்களும் நமது மாணவரணியில் உள்ளனர். உயர் கல்வி கற்க முஸ்லீம்களை ஊக்குவிக்க தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றோம்.

ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது TNTJ மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.
2. K.
ஹஸன் B.E – 9940611315
e-mail : tntjedu@gmail.com

 

 

IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம்

 

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :
(
ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்)
டிசம்பர் 19 (19/12/09) இன்ஷா அல்லாஹ்

தேர்வு நடைபெறும் தேதி
ஏப்ரல் 11 (11/04/10)
இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி
மே 26 (26/05/10) இன்ஷா அல்லாஹ்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairmen, JEE, IIT Madras, Chennai – 600036
Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள்
விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)
044-2250 4500 (
காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)

விண்ணப்பத்தின் விலை :
Rs.1,000,
(
ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

வயது வரம்பு
அக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
a) +2-
வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள்,
b) +2
வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.
c) 3
ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்

குறைந்தபட்ச மதிப்பெண்
+2-
வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.
2. K.
ஹஸன் B.E – 9940611315

செய்தி:

S.சித்தீக்.M.Tech
TNTJ
மாநில மாணவரணி செயளலார்

 

நன்றி: www.tntj.net

திங்கள், நவம்பர் 02, 2009

இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் கூட்டுக் கூட்டம் (31 அக்டோபர் 2009)

இருநாடுகளின் தொழில் அதிபர்கள் பல முறை சென்று வருவதற்கு வசதியாக சிறப்பு விசா வழங்க இந்திய, சவுதி அரேபியா நாடுகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மேலதிகச் செய்திகளை மேலுள்ள படத்தினை அழுத்திப் பார்க்கவும்.

நன்றி: தினமணி.