எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், ஜூலை 09, 2013

நாகை வடக்கு-மயிலாடுதுறை கிளை-”பெண்கள் பயான்”


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 07-07-2013 அன்று மாலை 4.30 மணியள‌வில் மயிலாடுதுறை கிளை தலைவர் முஹம்மத் அலி அவர்களின் இல்லத்தில் “பெண்கள் பயான்” நடைபெற்றது. 

இதில் சகோதரி ஆயிஷா (அந்நூர் மதரஸா) “ரமலானை வரவேர்ப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஏகத்துவம்,தீண்குல பெண்மணி,உணர்வு மற்றும் மனனம் செய்வோம் ஆகிய புத்தகங்கள் கிளை சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

எல்லா புகழும் இறைவனுக்கே…….
 
 

நாகை வடக்கு மாவட்டத்தின் TNTJ அலுவலகம் திறப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத் நாகை வடக்கு மாவட்டத்தின் அலுவலகம் மயிலாடுதுறை கிளையில் அமைத்து மாவட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் கடந்த 30-06-2013 (மாவட்ட தர்பியா)அன்று முதல் செயல்பட தொடங்கியது.

அதனடிப்படையில் 07-07-2013 அன்று காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் அழைப்பு விடுத்து மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் மயிலாடுதுறை மர்கஸில் செயற்குழு கூட்டப்பட்டது. இதில் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ர‌மலான் மாதத்தில் செய்யவேண்டிய தாவா பணிகளை பற்றி பேசப்பட்டது.

இந்த செயற்குழு முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகக்குழு மாவட்ட அலுவலகத்தில் சகோ.  இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.  இதில் இதர மாவட்ட பொறுப்பாள‌ர்களும் அணி செயலாள‌ர்களும் கலந்துகொண்டனர்.






எல்லா புகழும் இறைவனுக்கே…….

நாகை (வடக்கு) மாவட்ட தர்பியா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 30-06-2013 அன்று மாவட்ட தர்பியா நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சகோதரர் யுசுஃப் "தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு" என்ற தலைப்பிலும் ,மாநில செயளாலர் சகோதரர்ஆவடி இப்ராஹிம் நிர்வாகவியல் என்ற தலைபிலும் மற்றும் மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபிக் தவ்ஹீத் ஜமாத்தின் தனித்தன்மை என்ற தலைப்பிலும் தர்பியா நடைபெற்றது.

இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொன்டு பயனடைந்தனர். மேலும் தர்பியாவின் இறுதியில் மாநில நிர்வகிகள் முன்னிலையில் மாவட்ட பொருப்பாளர்கள் முஹம்மத் இப்ராஹிம் தலைமையில் கீழ் காணும் பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

1.அப்துல் ஹமீத்-9865068438
2.ஜெகபர் சாதிக்-9791386950
3.ஹாஜா-8883231076
4.நசுரூதீன்-9524433000
5.பத்ருதீன்-9486718275
6.இர்ஃபான் (மாணவரணி)-8122835694
7.ந‌வ்சாத் (மருத்துவரணி)-8012299964

மேலும் தலைமையினால் நடத்தப்பட்ட மண்டல தர்பியாவில் வைத்து தரப்பட்ட மனனம் செய்வோம்,ரமளானின் சிரப்புகள்,மாமனிதர் நபிகள் நாயகம் (ஆங்கில பிரதி) ஆகியவை கிளைவாரியாக மாவட்டதின் அனைத்து கிளைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே.....








பொறையார் மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி


நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகரம் சார்பாக கடந்த 23.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 2.30 மணி வரை பொறையார் மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது .

அது சமயம் சென்னை வடக்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் தொழுகை பயிற்சிகளும் சட்டங்களும் என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தி  மேலும் ஜனாசாவிர்கான பயிற்சிகளும் அளித்தார்கள். 
அடுத்து நாகை தெற்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் யாசர் ரிஸ்வான் அவர்கள் இறை அச்சம் என்ற தலைப்பில் மார்க்க உரை ஆற்றினார்கள். 

அடுத்து கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது .