எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

வியாழன், பிப்ரவரி 24, 2011

திருவாடுதுரையில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக  திருவாடுதுரையில் கடந்த 20 -2 -2011 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு  ஜனாசாவின் சட்டங்கள் பற்றி விரிவாக உரை ஆற்றினார்கள் . ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

புதன், பிப்ரவரி 23, 2011

நாகை மாவட்டத் தவ்ஹீத் கூட்டமைப்பு பிப்ரவரி கூட்டம் ரியாத்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 18.02.2011 அன்று நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம், சகோ. அரசூர் பாருக் அவர்கள் துவக்கவுரையுடன் மாலை 5:00 மணிக்கு TNTJ ரியாத் மண்டல மர்கஸில் துவங்கியது. எதைச் செய்தாலும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.




சென்ற மாத மினிட் மற்றும் நாகை வடக்கிலிருந்து வந்தி்ருந்த செயல்பாடுகள் குறித்த செய்திகள் கூட்டமைப்பின் செயலாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வாசித்தார்கள். இதில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மாணவிகளை கல்விக் கூடத்திற்கு அனுப்ப வேண்டாம் என்ற நோட்டீஸ் வினியேகிக்கப் பட்டது என்று அறிந்தோம். இனி வரும் காலங்களில் மாணவர்களையும் கண்காணிக்க வேண்டும் என்ற வாசகத்தை இந்த நோட்டிஸில் குறிப்பிட வேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டது.



நாகை மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.



மஃக்ரிபு தொழுகைக்குப் பின், இக் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.....

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

பொறையார் கிளையில் ரூபாய் 28 ஆயிரம் மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 18-2-11 அன்று ஏழை சகோதரரின் குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 28171 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.


ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

நாகை குத்தாலம் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் பகுதியில் கடந்த 15-2-11 அன்று TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது.




மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது



திங்கள், பிப்ரவரி 14, 2011

ஜனாஸா நல்லடக்கம் - அடாவடி ஜமாஅத்தின் கொட்டம் அடங்கியது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) குத்தாலத்தை சேர்ந்த சகோ.சர்புதீன் அவர்களின் தந்தை ஹசன் முஹம்மது அவர்கள் 13-02-2011 அன்று மரணமடைந்துவிட்டார்கள் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). அவருடைய ஜனாஸாவை நபிவழியில் நல்லடக்கம் செய்ய ஜமாத்தார்கள் மறுத்து விட்டனர். பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துச்சென்று பள்ளிவாசலின் வெளியே வைத்து சர்புதீன் தனது தந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து போலிஸ் பாதுகாப்புடன் பள்ளியின் அடக்கஸ்தலத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் அடாவடி ஜமாஅத்தின் கொட்டமும் அடக்கப்பட்டது. அல்லாஹு அக்பர்.



ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

நாகை வடக்கில் காதலர் தின எச்சரிக்கை நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக காமூகர்கள் தினமான காதலர் தினத்தில் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவிப்பு செய்யும் வண்ணம் கடந்த 12-2-11 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.


தேர்தல் நிலைபாட்டை விளக்கி நோட்டிஸ் – நாகை வடக்கு


.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக தேர்தல் நிலைபாட்டை விளக்கி கடந்த 11-2-11 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை மர்கஸில் கடந்த 06-02-2011 அன்று, 10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற நிகழ்ச்சி மாணவ மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் மாவட்ட மாணவரணி செயலாளர் ஃபாஸில் தலைமை தாங்கினார்கள் கலீலுர் ரஹ்மான் MBA சிறப்புரை ஆற்றினார்.
அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்




அரசூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சுதாகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 28.01.2011, அன்று சீர்காழி அருகில் உள்ள தாண்டவன்குளத்தை சார்ந்த சுதாகர் என்ற சகோதரர் தன் வாழ்வியல் நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அல்லாஹு அக்பர்.
அல்ஹம்துலில்லாஹ்....




நீடூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் நீடூர் கிளையில் ஜனவரி 27 தெருமுனைப் பிரச்சாரம் 23.01.2011, அன்று நடைப்பெற்றது



இதில் மாவட்ட தலைவர் புகாரி, உபைத்துல்லாஹ் மன்பை, நவ்சாத் ஆகியோர்கள் உரையாற்றினர்.

கூடியிருந்தோர் ஆர்வமுடன் இந் நிகழ்ச்சியை கேட்டறிந்தனர்.



கீராநல்லூரில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் கீராநல்லூரில் கடந்த 24-01-2011 அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.