எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

தாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] சார்பாக 21.09.2010, அன்று P. J. மொழி பெயர்த்த குர் ஆன் இலவசமாக DR. பூபேஸ் தர்மேந்திரா M.B.B.S., வட்டார மருத்துவ அலுவலருக்கு மாவட்ட. து. செயலாளர் A.நிஜாம்தீன் வழங்கினார்.



இலவச கண் சிகிச்சை முகாம் - திருமுல்லைவாசல்

நாகை [வடக்கு] தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் நாகை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்டம் சார்பாக 21.09.2010, அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 வரை திருமுல்லைவாசல் அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

தலைமை அரசூர் ஃபாரூக் மாவட்ட துனைத் தலைவர், முன்னிலை A.M. சலீம் திருமுல்லைவாசல் A.M.மன்சூர் மாவட்ட பேச்சாளர் TNTJ. இதில் 75, நபர்கள் கலந்துக் கொண்டு 20, து நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமணையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் நன்றி உரை A.நிஜாம்தீன் மாவட்ட து.செயலாளர்.

நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் - 17 செப்டம்பர் 2010

கடந்த 17 செப்டம்பர் 2010 அன்று மாலை 5.10 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டல மர்கஸில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது.


இக்கூட்டம் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமையில் அவர்களின் துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. காதியானிகளின் தோற்றமும் அவர்களின் சந்தர்ப்பவாதங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து கடந்த மாத மினி்ட்டை செயலாளர் வாசித்தார். மேலும் நாகை (வடக்கு) மாவட்டத்திலிருந்தும் கிளைகளிலிருந்தும் வந்திருந்த நோன்புப் பெருநாள், ஃபித்ரா விநியோகம் மற்றும் கடந்த மாதத்தில் நடைபெற்ற சமுதாயப் பணிகள் குறித்த செய்திகள் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள்

உம்முல் முஃமினீன் பெண்கள் மதரஸா வளர்ச்சிக்கு உதவுவது குறித்துவானாதிராஜபுரம் மற்றும் அரசூர் டிஎன்டிஜே கிளைகளிலிருந்து வந்திருந்த கோரிக்கை மனுக்கள் குறித்துகூட்டமைப்பிற்கு உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பது குறித்து

அல்லாஹ்வின் கிருபையால் மக்ரிப் தொழுகைக்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] வடகரை கிளை சார்பாக வசூலித்த தொகை 16694,தலைமை மூலம் 8000,ம் மொத்தம் 24699, இதை 101 குடும்பங்களுக்கு ஒரு பையின் மதிப்பு 244.65,க்கு 09.09.2010, அன்று இரவு 10.30,மணிக்கு பெருநாள் தர்மமாக விநியோகிக்கப்பட்டது.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] ஆக்கூர் கிளையில் கடந்த 09.09.2010, அன்று நோன்புப் பெருநாள் தர்மம் விநியோகம் செய்யப்பட்டது தலைமை மூலம் 6000,ம் உள்ளூர் வசூல் 14470, மொத்தம் 20470, ரூபாய் 83 குடும்பங்களுக்கு 247.50 விகிதத்தில் உணவுப் பொருள்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன

பொறையார் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 23998 மதிப்பிற்கு 142 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


நாகூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.


நாகூரில் ரூபாய் 82 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் நகரத்தில் இந்த ஆண்டு 450 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 150 மதிப்புள்ள உணவுப் பொருட்களும் 100 ஏழை குடும்பங்களுக்கு 100 ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 82900 மதி்ப்பிற்கு ஃபித்ரா வழங்கப்பட்டது.


நாகப்பட்டிணம் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் நாகப்பட்டிணம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.




இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.


சனி, செப்டம்பர் 18, 2010

பெருநாள் தர்மம் - தொழுகை கிளியனூர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] கிளியனூர் கிளை சார்பாக கடந்த 09.09.2010, அன்று இரவு 11.00,மணிக்கு ஃபித்ரா விநியோகம்  செய்யப்பட்டன தலைமை மூலம் 5000,ம் வசூள் 9300, மொத்தம் 14300, ஒரு குடும்பத்துக்கு 220 வீதம் 65 து குடும்பத்திற்க்கு வழங்கப்பட்டது.







பெருநாள் தொழுகை
நாகை மாவட்டம் [வடக்கு] கிளியனூர் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 10.09.2010, அன்று தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைப் பெற்றது காலை 8.10 க்கு இறை அச்சம் என்ற தலைப்பில் நவ்சாத் உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் கலந்துக் கொண்டனர்.

உதவித் தொகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] வடகரை கிளை சார்பாக கடந்த 12.09.2010, அன்று உதவித் தொகையாக ரூபாய் 2000,த்தை நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஹபீபுல்லாவின் மனைவிக்கு கிளை பொருளாலர் அலி வழங்கினார்.

ஆழியூர் கிளையில் பெருநாள் தொழுகை மற்றும் ஃபித்ரா வினியோகம்

ஆழியூர் கிளையில் பெருநாள் தொழுகை திடலில் தொழுவிக்கப்பட்டது.
கொள்கை சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு தொழும் காட்சியும், இந்த ஊரில் நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) வினியோகமும் நடைபெற்ற காட்சி இத்துடன் போட்டோவுடன்...








பெரியகூத்தூர் கிளை TNTJ செயளாலர் ஹபீப்புல்லாஹ் மரணம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] பெரியகூத்தூர் கிளை செயளாலர் ஹபீப்புல்லாஹ் அவர்கள் 11.09.2010, அன்று மரணம் அடைந்தார். இவருக்கு வயது 35, அண்ணாருக்கு மனைவியும், 6 வயதில் ஒரு பெண்குழந்தையும் உள்ளன.


அவர் கடந்த இரண்டு வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார், இறுதியாக சென்னைக்கு சென்று மருத்துவம் பார்த்தார். கிட்னி பழுது அடைந்ததன் காரணமாய் இறந்து விட்டார்.


கிளை சகோதரர்கள் பெரியகூத்தூர் ஜமாத்தார்களை அனுகி நபி வழியில் நல்லடக்கம் செய்வதர்க்கு முயற்ச்சித்தனர், மறுத்து வந்த ஜமாத்தினரை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசிய பின், மையத் கொள்ளையை திறந்து விட்டு அடக்கம் செய்து கொள்ள அனுமதித்தனர். அமைதியான முறையில் நல்லடக்கம் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.


இந்த நடைமுறைகளை மற்ற ஜமாத்தினரும் பின்பற்றினால் பிரச்சனைகள் பல தவிற்க்கப்படும். மேலும் மருத்துவத்திற்காக கடன்பட்டு இருந்தார், ஜனாஸாத் தொழுகையின் போது மண்ணிப்பவர்கள் மண்ணித்து விடுங்கள் அல்லது மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக் கொண்டால் இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டன.



மயிலாடுதுறை மர்கஸ் பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை[வடக்கு] மாவட்டம் மயிலாடுதுறை மர்கஸ், தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் 10.09.2010, அன்று காலை 8.00, மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. நோன்பின் மான்புகள் என்னும் தலைப்பில் மாவட்ட தலைவர் H.M.புகாரி உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏறளமானோர் கலந்து கொண்டனர்

குடிநீர் சுத்தகறிப்பு சாதனம் அன்பளிப்பு

தமிழ்நாtடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம்[வடக்கு] மயிலாடுதுறை மர்கஸிற்காக குவைத் வாழ் சகோதரர்கள் DR நூர், அப்துல் அஜீஸ். ரூபாய் 9000, ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்தகறிப்பு சாதனத்தை கடந்த 20.08.2010, அன்று மாவட்டம் சார்பாக வழங்கினார்கள்.


இது ரமாளானில் மிகவும் பயான் அளிக்கும் வகையில் இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், செப்டம்பர் 16, 2010

வாழ்வாதார உதவி


நாகை மாவட்டம் திருவெண்காடை சார்ந்த ஜாஃபர் உசேன் என்ற சகோதரர் குவைத்தில் கார் விபத்தில் கடந்த 25.12.08,அன்று பாதிக்கபட்டு சிகிச்சைக்காக வந்து பயன் அளிக்காமல் 15.05.10,அன்று திருவெண்காட்டில் மரணித்துவிட்டார் 33,வயதான அவருக்கு மனைவியும் சமீர் 4, வயது குழந்தையும் உள்ளார் வாழ்வாதார உதவியாக நாகை [வடக்கு] மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 12000,ம் ரூபாயை மரணித்தவரின் மைத்துனர் சகோ சாதிக்யிடம் மாவட்ட து.செ.நிஜாம் 14.09.2010, அன்று ஒப்படைத்தனர்.

நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மயிலாடுதுறையில் தமிழ் டிவி என்னும் பெயரில் இயங்கும் கேபில் டிவியில் நோன்பின் மான்பை நோன்புக்கு பின்பும் பின் பற்றுவோம் என்று மாவட்டத் தலைவர் H.M.புஹாரி கடந்த 10.09.2010 அன்று காலை 11.00 மணி முதல் 12.00, வரை பேசினார் இந்த நிகழ்ச்சி நேரடியாக சுமார் 150, க்கும் மேற்ப்பட்ட ஊர்களுக்கு தெரியும் வகையில் ஒளிப்பரப்பானது.

ஃபித்ரா விநியோகம் - புதுப்படட்டிணம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] புதுபட்டிணம் கிளையில் 09.09.2010 அன்று இரவு 10, மணிக்கு ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம், தலைமை மூலம் 3000,ம் வசூல் 1590, மொத்தம் 4590,ரூபாய் 18, நபர்களுக்கு ஒருபை 255,பதிப்புக்கு வழங்கப்பட்டது.

ஃபித்ரா வினியோகம்

நாகை [வடக்கு] அரசூர் கிளை ஃபித்ரா வரவு செலவுகள்


1 அப்துல் ரஜாக் அரசூர் 250, 21 மஜிஹர்னிஷா சீர்காழி 200,

2 அபீப் அம்மாள் அரசூர் 250, 22 நிலவர்னிஷா சீர்காழி 150,

3 கலீல் அரசூர் 250, 23 இப்ராஹீம் சேந்தங்குடி 250,

4 அப்துல் வஹாப் அரசூர் 200, 24 சபினா அரசூர் 50,

5 ஃபாரூக் அரசூர் 400, 25 ஜக்கீருசேன் அரசூர் 100,

6 உம்மா சல்மா அரசூர் 50, 26 ஃபாத்திமா அரசூர் 50,

7 ஃபஜர் நிஷா சீர்காழி 100, 27 தருவுஸ் அரசூர் 50

8 ஹபீப்கனி அரசூர் 100, 28 சரீஃப் அரசூர் 100,

9 சுல்தான்பிவி அரசூர் 100, 29 பேபி அரசூர் 100,

10 புகாரி ஹசன் அரசூர் 100, 30 அப்துல் பாரி அரசூர் 300,

11 சரீஃப் நாகூர் 200, 31 அஃபிஸ் விழுப்புரம் 400,

12 அப்துல்லாஹ் சீர்காழி 150, 32 மன்சூர் குறிச்சிமலை 550,

13 முஹமது அன்வர் சிர்காழி 150, 33 யாக்கத்துனிசா அரசூர் 50,

14 மதினா அரசூர் 200, 34 ஜவகர்னிசா அரசூர் 100

15 சபீர் முஹம்மது அரசூர் 200, 35 நபிசா அரசூர் 150,

16 அப்துல்லாஹ் பாண்டிச்சேரி 150, 35 மாவட்டம் மயிலாடுதுறை 5000

17 செய்யது அலி அரசூர் 250, மொத்த வரவுகள்: 11150,

18 அப்துல் காதர் சீர்காழி 50, மொத்த செலவுகள்: 11150.

19 அஜ்மத்பிவி சீர்காழி 200,

20 மன்சூர் அலி சீர்காழி 200,

ஃபித்ராவுக்கு வினியோகித்த பொருள்கள் விலை உள்பட

1 ப. அரிசி 1,கிலோ 35 ரூபாய்

2 மசாலா பாக்கெட் 30,

3 டால்டா 100, கிராம் 7

4 ஜீனி 500 கிராம் 14

5 சன் ஆயில் 500 கிராம் 33

6 உப்பு 1, கிலோ 10

7 சேமியா 100 கிராம் 10

8 பட்,கிரா,ஏல,முந்,திரா 18

9 பெ வெங்காயம் 500 கி 8

10 உருழைகிழங்கு 500 கி 8

11 தக்காளி 500 கி 7

12 இஞ்ஜி பூண்டு 200 கி 15

13 கோழி 500 கிராம் 52. 50

பன்னிரெண்டு ரூபாய் ஐம்பது பைசா மீதி இருந்ததை பச்சை மிளகாய் வாங்கி பைகளில் போட்டு விட்டோம்.

மொத்தம் 45-ந்து பைகள் விநியோகிக்கப்பட்டது.





ஃபித்ரா வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] அரசூர் கிளையில் 09.09.2010, அன்று இரவு 11.45 க்கு தலைமை தந்த ரூபாய் 5000, கிளையில் வசூலித்த ரூபாய் 6150, மொத்தம் 11150,ரூபாய் தலைமையின் வழிகாட்டல் படி ஒரு பையின் மதிப்பு 247. ரூபாய் 50,பைசா மதிப்பிளான ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் 45 நபர்களுக்கு செய்யப்பட்டது.

பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மாவட்டம் அரசூர் கிளையில் மஸ்ஜீத் அர் ரஹ்மான் எனும் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில், திடல் தொழுகை 10.09.2010, அன்று காலை 8.30,மணிக்கு நடைபெற்றது. அரசூர் ஃபாரூக் இஸ்லாம் கூறிய கடமைகள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏறளமானோர் கலந்து கொண்டனர்.

அரசூர் கிளையில் இஃப்தார் விருந்து

இஃப்தார் விருந்து




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] அரசூர் கிளையில் 05.09.2010, அன்று மாணவர் அணி ஏற்பாடு செய்த மாபெரும் இஃப்தார் விருந்து நடைபெற்றது மாலை ஐந்து மணிக்கு கிளை மாணவர் அணிச் செயளாலர் S.ஃபைஜுல் [DCE] தலைமையில் நடைபெற்றது. H.M.புகாரி மாவட்டத் தலைவர் நவீனகாலத்து இளைஞர்கள் என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உரை நிகழ்த்தினார் ,சங்கரன்பந்தல்,மாகனாம்பட்டு, போன்ற இடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர் பார்பதற்கு கல்வி மான்கள் மட்டுமே பங்கேற்ற விருந்து போல் அமைந்திருந்தன அரசூர் கிளை சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தன A.அபுதாஹீர் [BBA] கிளை மா.அ.து.செயளாலர் நன்றி உரையுடன் நிறைவுற்றன அல்ஹம்துலில்லாஹ்.