எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

புதன், நவம்பர் 18, 2009

நுரையீரல்

நுரையீரல்

நுரையீரல் என்பது உயிரனங்கள் தங்களின் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். அது மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதுடன், வேறுசில வேதிப்பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் பணியாகும்.  நுரையீரலானது உடல் இயக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிசனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதற்கு உரிய முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம் கிட்டதட்ட 255 கன மீட்டர் [9000.கன அடி] காற்றை உள்ளிழுத்து வெளியிடுகின்றோம்.  நம்மில் பலருக்கு மார்பு சளி, ஒவ்வாமையினால் (அலர்ஜி) மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் வருவதுண்டு. இதற்கு காரணம் நம்முடைய உணவு பழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல். நாம் வாழும் நகரத்தில் தொழில் சாலைகள் 49%, வாகனம் மற்றும் நாம் உபயோகிக்கும் குளிர் சாதனங்கள் மூலம் 12% இப்படி நச்சுக் கழிவுகள் நாளுக்கு நாள் கலந்து கூடி கொண்டே போகின்றது மரங்கள் அதிகம் இருந்தாலும் கார்பன் டை ஆக்ஸ்சைடை உள்ளிழுத்து நமக்குத் தேவையான ஆக்ஸிசனை தரும் நாம் வாழும் நகரத்தில் அதற்கும் வழி இல்லை, இந்த நிலையில் நம்முடையு உணவு மற்றும் உடல் பயிற்சி மூலமே நிவாரணம் தேடமுடியும். சாப்பாடு, தண்ணீர் உட்கொள்ளும் போது மிதமான சூட்டுடன் இருக்கவேண்டும் சிலர் கொதி தண்ணிரில் ஜீரகம் கலந்து அருந்துகிறார்கள் இதில் சளித் தொல்லை உள்ளவர்கள் ஜீரகத் தண்ணிர் அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். கொத்து மல்லி, இஞ்ஜி, கலந்த தண்ணீரைக் குடிக்கலாம்.

கொதிக்கவைத்த தண்ணீரை நன்கு ஆறியவுடன் குடிக்கின்றார்கள் அப்படிச் செய்யாமல் மிதமான சூட்டுடன் குடிப்பது நன்மைதரும். நுரையீரலில் மார்புப் பகுதியில் சளி படிந்து கொண்டுதான் இருக்கும் அது ஒருவித சளிகொழுப்பு. அதன் மீது இளஞ் சூட்டுடன் தண்ணீர் உணவு படப்பட சளி கொழுப்புகள் இழகிவிடும். குறிப்பாக சிலருக்கு மூச்சி விட்டால் கர் புர் என்று பூனை கத்துவது போல் சப்தம் வரும் இதற்காக மருந்துகள்  சாப்பிட்டாலும் மருந்துகள் முடிந்ததும் மீண்டும் அதேத் தொல்லை தொடரும். முடிந்தவரை இதிலிருந்து தப்பித்துகொள்ள வேண்டும் என்றால் மிதமா சூட்டில் தண்ணீர், உணவு மற்றும் சின்னச்சின்ன உடற்பயிற்சிகள் மூலமே சளித் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். அல்லாஹ் போதுமானவன்.

 ரியாத்திலிருந்து அரசூர் ஃபாரூக்  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக